/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட கராத்தே போட்டி :மாணவர்களுக்கு பாராட்டு
/
மாவட்ட கராத்தே போட்டி :மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 21, 2025 06:02 AM

சேத்தியாத்தோப்பு: மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார், பாதிரிக்குப்பத்தில், ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கான கராத்தே போட்டி நடந்தது.
இதில், கராத்தே போட்டியில் பூதங்குடி எஸ்.டி. சீயோன் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.சப் ஜூனியர் பிரிவில் பவித்ரன், நித்தின், கார்த்திகா ஆகியோர் முதலிடமும், ஜூனியர் பிரிவில் ஆதித்யா இரண்டாமிடமும், சீனியர் பிரிவில் நிறைமதியன், கவுதம்ராஜா, அஜித்தா ஆகியோர் முதலிடமும், பவன்குமார், திவ்யபாரதி ஆகியோர் இரண்டாம் பிடித்து வென்றனர்.
பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின், கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய்ரங்கநாதன் ஆகியோர் பாராட்டி சான்று வழங்கினர்.

