/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட புள்ளியியல் கையேடு: கலெக்டர் வெளியீடு
/
மாவட்ட புள்ளியியல் கையேடு: கலெக்டர் வெளியீடு
ADDED : நவ 10, 2025 04:12 AM

கடலுார்: நடப்பு ஆண்டிற்கான மாவட்ட புள்ளியியல் கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார்.
கடலுார் மாவட்ட புள்ளியியல் கையேடு ஆண்டுதோறும், துணை இயக்குநர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு கலெக்டரால் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த கையேட்டில் மாவட்டம் தொடர்புடைய அனைத்து துறைகளில் அளிக்கும் புள்ளிவிவரங்கள், மக்கள்தொகை, மழை புள்ளி விவரங்கள், நீர்பாசன பரப்புகள், வேளாண்மை, கால்நடை, மீன்வளர்ப்பு, பொது சுகாதாரம், மின்சாரம், சுற்றுலா, பள்ளிகள், கல்லுாரிகள், வங்கிகள், போக்குவரத்து, தொழில் நிறுவனங்கள். சாலைகள், ரயில்வே போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இக்கையேடு அரசின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கும், ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டிற்கும் பேருதவியாக உள்ளது. நடப்பு ஆண்டிற்கான மாவட்ட புள்ளியியல் கையேடு, வெளியீட்டு நிகழ்ச்சி கடலுார் கலெக்டர் அலுவலத்தில் நடந்தது. இந்த நிகழ்வில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கையேட்டை வெளியிட்டார்.
இந்த நிகழச்சியில் புள்ளியியல் துணை இயக்குனர் முத்துக்குமரன், கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் கனகேஸ்வரி, அலுவலர் முரளிதரன் மற்றும் ஆய்வாளர் ஞானசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

