sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை

 தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை

 தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை


ADDED : டிச 20, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 06:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் விழாவில், சுவாமியை மறைத்து கொண்டு செல்லக்கூடாது என தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு மனு அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:

வரும் 25ம் தேதி, மார்கழி மாத, ஆருத்ரா தரிசன விழா துவங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஜன., 2ம் தேதி தேர், 3 ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. நடராஜர் - சிவகாமசுந்தரி தேரில் இருந்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லும் போது, வழிநெடுகிலும், பக்தர்கள் தீபாராதனை எடுத்து வணங்கும் நடைமுறை பல நுாற்றாண்டு காலமாக இருந்து வருகிறது.

இந்த, ஆருத்ரா தரிசன விழாவின் போது, சுவாமியை வலது புறம் மட்டும், துணியால் திரையிட்டு மறைத்து துாக்கி கொண்டு செல்லும் நடைமுறையை கைவிட்டு, பக்தர்கள் வழிபட உரிய நடவடிக்கை எடுத்து, மனித வழிபாட்டு உரிமையை பாதுகாக்கவேண்டும்.

தரிசன விழா நடைபெறும் 4 நாட்களும், கனக சபை மீதேறி தரிசனம் செய்ய தடை விதிக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அறநிலையத் துறையும் அறிவுறுத்தி பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us