/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு
/
பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு
ADDED : அக் 19, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிலைய அலுவலர் கவிதா தலைமை தாங்கி விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது பற்றி விளக்கினார்.
மேலும் பட்டாசுகளால் தீக்காயங்கள் ஏற்பட்டால் அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் பற்றி கூறப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாணவர்களும் தலைமையாசிரியர் தேவனாதன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.