டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரித்த தி.மு.க., வேட்பாளர் சரவணன்
டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரித்த தி.மு.க., வேட்பாளர் சரவணன்
ADDED : ஏப் 11, 2026 05:29 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து ஓட்டு சேகரித்தார்.
புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கீரப்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரதுார் சாவடி, பொன்னங்கோவில், சாத்தமங்கலம், சக்தி விளாகம், அள்ளூர், பூதங்குடி பகுதிகளில் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, சாத்தமங்கலம் கிராமத்தில் பிரசார வேனில் கீழே இறங்கிய தி.மு.க., வேட்பாளர் சரவணன், டீக்கடைக்கு சென்று அங்கிருந்த பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து ஓட்டு சேகரித்தார்.
