/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மானபங்கம் செய்த வழக்கு தி.மு.க., பிரமுகர் தலைமறைவு
/
மானபங்கம் செய்த வழக்கு தி.மு.க., பிரமுகர் தலைமறைவு
மானபங்கம் செய்த வழக்கு தி.மு.க., பிரமுகர் தலைமறைவு
மானபங்கம் செய்த வழக்கு தி.மு.க., பிரமுகர் தலைமறைவு
ADDED : அக் 11, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், தி.மு.க., முன்னாள் ஊராட்சித் தலைவர் தலைமறைவானார்.
மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பெரியசாமி, 53. முன்னாள் தி.மு.க., ஊராட்சித் தலைவர்.
கடந்த 4ம் தேதி அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மனைவி அம்சவள்ளி, 25, என்பவரிடம் தகராறு செய்து, அவரை ஆபாசமாக திட்டி, மானபங்கம் செய்தார்.
அவரது புகாரின் பேரில், பெண்களை துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பெரியசாமியை தேடி வருகின்றனர்.