sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை

/

தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை

தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை

தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை


ADDED : நவ 09, 2024 07:47 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடலுாரில் நடந்தது.

தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி, சமூக வலைதள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாவட்ட துணை செயலாளர் சுதா சம்பத், கடலுார் மேயர் சுந்தரி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் மஞ்சு முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அமுதராணி வரவேற்றார்.

கிழக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்டந் தோறும், நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும். வரும் 14, 17, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும் புதிய வாக்காளர் சேர்க்கை முகாமில் பெயர் சேர்த்தல் பணியை துரிதமாக செய்ய வேண்டும்' என்றார்.

கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து, சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சிவக்குமார், ஆனந்தன், மாநகர செயலாளர் ராஜா, நகராட்சி தலைவர்கள் சிதம்பரம் செந்தில்குமார், வடலுார் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us