/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
/
தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
ADDED : ஜூலை 23, 2025 11:22 PM

விருத்தாசலம்:விருத்தாசலம் நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது.
கூட்டத்திற்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், துணை செயலாளர் ராமு, பொதுக்குழு பாலகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணசாமி, நகர தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், வழக்கறிஞரணி அருள்குமார், பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழக பேச்சாளர் கோபிநாத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், இளம் பேச்சாளர் வேல்முருகன் நான்காண்டு சாதனைகள் குறித்து பேசினர்.
நிர்வாகிகள் பழனிசாமி, அறிவுடைநம்பி, முகமது பாசில், ரவிச்சந்திரன், செல்வமணி, இளங்கோவன், கவுன்சிலர்கள் உஷாபாலு, தீபா மாரிமுத்து, வசந்தி புருேஷாத்தமன், பரந்தாமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இளைஞரணி தளபதி குமார் நன்றி கூறினார்.