/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., இளைஞரணி தெருமுனை பிரசார கூட்டம்
/
தி.மு.க., இளைஞரணி தெருமுனை பிரசார கூட்டம்
ADDED : ஜூலை 05, 2025 03:17 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராமத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்தநாளையொட்டி, தி.மு.க., வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய அவை தலைவர் சிவசங்கரன், ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், அன்பழகி ராஜேந்திரன், கோவிந்தராஜ், ஒன்றிய பொருளாளர் சாமி முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருஞானம் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, மாநில இளைஞரணி துணை செயலர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், பேச்சாளர் எபினாமேரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாரதி, சதீஷ், வீரபாண்டியன், சுபாஷ், வாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.