ADDED : ஜன 09, 2025 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்; மானியம் ஆடூரில் கருங்கல் ஜல்லி ஏற்றிச்சென்ற லாரி மோதி முதியவர் உயிரிழந்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மானியம் ஆடூரை சேர்ந்தவர் அப்துல் அலிம், 64; நேற்று முன்தினம் அப்துல் அலிம் தனது வீட்டு வாசல் அருகே நின்றார்.
அப்போது மானியம் ஆடூருக்கு தார் சாலை பணிக்கு கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த லாரி அப்துல் அலிம் மீது மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கி முதியவர் உடல் நசுங்கி இறந்தார். புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

