ADDED : மார் 14, 2024 06:12 AM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பத்தில், வயிற்று வலி கொடுமையால் பூச்சி மருந்து குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
மந்தாரக்குப்பம் கடைவீதியை சேர்ந்தவர் ஜெயபால், 60; வெல்டிங் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.
நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி காரணமாக தனது கடையில் வைத்திருந்த பூச்சி மருந்து குடிந்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவனைமயில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார்.
மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
