ADDED : ஜூலை 09, 2025 08:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அருகே கார் மோதியதில், மொபட்டில் சென்ற மூதாட்டி இறந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மனைவி ராஜேஸ்வரி, 70; இவர், தனது மருமகன் முருகானந்தம் என்பவருடன் சிதம்பரத்தில் இருந்து பூவாலைக்கு நேற்று மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டை முருகானந்தம் ஓட்டினார்.
சிதம்பரம் அடுத்த ஏ.மண்டபம் அருகே வந்த போது, பின்னால் வந்த கார், மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். முருகானந்தம் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.