/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடந்து சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து பலி
/
நடந்து சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து பலி
ADDED : நவ 05, 2024 06:12 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே உறவினர் வீட்டிற்கு நடந்து சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூரைச் சேர்ந்தவர் காசிராஜன் மனைவி காமாட்சி, 70; இவர், நேற்று முன்தினம் சிறுகாட்டூரில் இருந்து ஈச்சம்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.
ஈச்சம்பூண்டி ஆதிதிராவிடநலப் பள்ளி அருகே சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடன் அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று இறந்தார்.
இது குறித்து அவரது மகள் குமுதா, 55; கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.