ADDED : ஏப் 01, 2026 03:49 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ஊராட்சியில் துாய்மை காவலர்கள் தேர்தல் விழிப்புணர்வு நடத்தினர்.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சியில் துாய்மை காவலர்கள் மூலமாக தெருக்களில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு செய்தனர்.
