ADDED : பிப் 05, 2026 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் ரோட்டரி கிளப் கடலுார் மிட்டவுன், சுரேந்திரா பன்நோக்கு மருத்துவமனை இணைந்து அவசர கால முதலுதவி பயிற்சி நடத்தியது.
தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சுரேந்திரா பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., தமிழினியன், பயிற்சி துவக்கி வைத்தார். டாக்டர் தயாநிதி, பயிற்சி அளித்தார். சுரேந்திரா மருத்துவமனை நிறுவனர் ராஜேந்திரன், முன்னாள் உதவி ஆளுனர் அப்பர்சாமி, முன்னாள் தலைவர் ஆசைத்தம்பி ராஜி பங்கேற்றனர்.
பார்த்திபன் நன்றி கூறினார்.

