/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் வரும் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
/
கடலுாரில் வரும் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 18, 2024 07:00 AM
கடலுார் : கடலுார், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து வரும் 20 ம் தேதி கடலுார், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வுசெய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவுள்ளனர்.
முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 , ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்துள்ளார்.