நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: வேலைக்கு செல்லாததை தாய் தட்டிக் கேட்டதால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையம் ரயில்வே ஸ்டேஷன் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் தினேஷ்,23 3; இவர் இன்ஜினியரிங் படித்து விட்டு புதுச்சேரி தனியார் கம்பெனியில் வேலை செய்தார். கடந்த 18ம் தேதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் மொபைல் பார்த்ததை தாய் ஆனந்தி தட்டிகேட்டார்.
இதனால் மனமுடைந்த தினேஷ் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.