/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டம்
/
கடலுாரில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டம்
ADDED : பிப் 08, 2026 03:41 AM

கடலுார்: கடலுார் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த கூட்டம் நடந்தது.
புத்தாக்க நிறுவனத்தின் ஆணையர் லதா தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட புதிய மேம்பாடு, உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை நிறுவன வாய்ப்புகள், புதிய தொழில் முதலீடு நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகள், வேலைநாடுநர் திறன் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாவட்டத்திலுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து சங்கமாக செயல்பட வைப்பது; உளுந்து, பச்சை பயிறு, பலா, முந்திரி உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கான தேவைகள், சந்தைவாய்ப்புகள், கிடங்கில் சேமித்து வைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக உருவாக்குவது குறித்தும் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன உதவி இயக்குனர் பிரேம்குமார், மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ், திட்ட அலுவலர் ரோஷினி, திட்ட மேலாளர் எழில் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

