ADDED : ஏப் 11, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ தினமாக கடைபிடிக்க அரசு அறிவித்துள்ளது. அதற்கிணங்க 14ம் தேதி அரசு விடுமுறை தினம் என்பதால் நேற்று சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.