/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சமத்துவ பொங்கல்
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 12, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
நகராட்சி வளாகம் முழுவதும் வண்ண கோலங்கள் போட்டிருந்தனர். புதுப்பானையில் பெண்கள் மத ஒற்றுமையுடன் பொங்கல் வைத்தனர். சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், தி.மு.க. நகர செயலாளர்
மணிவண்ணன், வி.சி., நகர செயலாளர் திருமாறன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சேர்மன் பரிசு வழங்கினார்.

