
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, செயல் அலுவலர் முத்து தலைமை தாங்கினார். சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு, துணை சேர்மன் குமரவேல் முன்னிலை வகித்தனர்.
முதல்நிலை எழுத்தர் ரமேஷ் வரவேற்றார். வார்டு கவுன்சிலர்கள் சக்திவேல், சரண்ராஜ், ஆனந்தராமகிருஷ்ணன், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜ்குமார், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பேரூராட்சி அலுலகம் முன்பு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
இதேபோன்று, பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் உதயகுமார் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

