நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டம் பூதகேணியில் நடந்தது.
கூட்டத்திற்கு நகர தலைவர் அன்வர் அலி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பெஹல்காம் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கொடூரமான மனிதாபிமானமாற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
டில்லியில், நடைபெற உள்ள இந்திய முஸ்லீம் லீக் தேசிய அலுவலகமான 'காயிதே மில்லத் சென்டர்' திறப்பு விழாவில்' அனைவரும் பங்கேற்க வேண்டும், கோடை காலத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

