நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம், கீழ புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 64. இவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இதையறிந்த பெண்ணாடம் லயனஸ் கிளப் தலைவர் சக்திவேல், உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி ஆகியோர் இறந்தவரின் குடும்பத்தினரை சந்திந்து கண் தானம் வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கினர். அதைத்தொடர்ந்து, குடும்ப உறுப்பினர் சம்மதத்துடன் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் தானம் செய்யப்பட்டது. அப்போது, சங்க மாவட்ட தலைவர் அருள்முருகன், வட்டார தலைவர் மேழிச்செல்வன், பொருளாளர் பாண்டியன், துணை தலைவர் வெங்கடேஷ்வரன், இறந்தவரின் உறவினர்கள் உடனிருந்தனர்.