ADDED : நவ 14, 2024 07:22 AM
விருத்தாசலம் ; கம்மாபுரம் அருகே இருபிரிவினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அடுத்த பு.ஆதனுார் கிருஷ்ணமூர்த்தி மகன் பிரவிந்த், 16; கடந்த இரு நாட்களுக்கு முன், முகந்திரியங்குப்பம் இசேவை மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அங்கு அமர்ந்திருந்த பெருவரப்பூர் காலனியை சேர்ந்த வாலிபர்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், பிரவிந்த பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், பெருவரப்பூர் காலனியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சிவக்குமார், 19, தனது சகோதரருடன் சேத்தியாதோப்பில் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு திரும்பி வந்தபோது, பிரவிந்தை தாக்கியவர்கள் எனக் கருதி, பு.ஆதனுாரை சேர்ந்தவர்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பிரவிந்த் புகாரின் பேரில், பெருவரப்பூரை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிந்து, மதிவாணன் மகன் ராஜ்குமார், 24, கல்யாணகுமார் மகன் அஜித்குமார், 26, பழனிவேல் மகன் முத்துபாண்டி, 19, ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், சிவக்குமார் புகாரின் பேரில், 5 பேர் மீது டி.எஸ்.பி., மோகன் தலைமையிலான போலீசார், எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, உத்திராபதி மகன் திருமலைவாசன், 17, பாபு மகன் பாரதிராஜா, 21, ரவிச்சந்திரன் மகன் வல்லரசு, 19, ஆகியோரை கைது செய்தனர்.