ADDED : மார் 31, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
வேப்பூர்: தனியார் செராமிக் தொழிற்சாலையில் ஊழியர் பலியானார்.
வேப்பூர் அடுத்த பிஞ்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 37; வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் தனியார் செராமிக் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில் தொழிற்சாலையில், வேலை செய்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, எதிர்பாராத விதமாக மிஷின் மேலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். உடன், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததில், பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
