ADDED : டிச 26, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
கீழ்புவனகிரியை சேர்ந்தவர் தங்கராசு மகன் பார்த்திபன், 32; திருமணமாகவில்லை. கம்பி பிட்டர் வேலை செய்து வந்தார். கடந்த 23ம் தேதி புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் கிராமத்தில் வீடு கட்டும் பணிக்கு கம்பி கட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.