UPDATED : ஆக 20, 2026 07:39 PM
ADDED : ஆக 20, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம்:குளவி கொட்டி விவசாயி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.
பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 64; விவசாயி. இவர், காலை 10:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தை பார்க்கச் சென்றார்.
அப்போது திடீரென குளவிகள் கூட்டமாக பறந்து வந்து அண்ணாதுரையை கொட்டியது. மயங்கி விழுந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு, பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற அண்ணாதுரை பகல் 11:00 மணியளவில் வீட்டிற்கு சென்றார். சம்பவம் குறித்து, பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.
