ADDED : அக் 07, 2024 06:59 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: மருதுார் அருகே வயிற்று வலியால் மன உளச்சலில் இருந்த விவசாயி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த பு.கொளக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 55; விவசாயி.
இவர் வயிற்று வலி பிரச்னையால் மன உளச்சலில் இருந்துள்ளார். நேற்று முன் தினம் மாலை 3.00 மணிக்கு பு. கொளக்குடி, ஜெயங்கொண்டான் வாய்க்கால் அருகில் உள்ள களத்து மேட்டில் மயங்கி கிடந்தார்.
தகவலறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்திருந்ததும், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
