நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்முருகன்,40, விவசாயி. கடன் தொல்லையால் கடும் மனஉளைச்சலில் இருந்துவந்தார். கடந்த 7ம் தேதி வீட்டில் வயலுக்கு வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.