நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட விவசாயி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அருகே ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ்,48; விவசாயி. உடல் நல பாதிப்பால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த 28ம் தேதி  பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.
உடன்  உறவினர்கள் அவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்  மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.
புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

