நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி -உடல்நலக் குறைவால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த மருதுார் அடுத்த மஞ்சக் கொல்லை வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஜெயராமன், 70; விவசாயி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 13ஆம் தேதி திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.