நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கிள்ளை அடுத்த பு.மடுவங்கரையை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 52; விவசாயி. இவர், கடந்த மாதம் 25ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், குடும்பத்தினர் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற் று அவர் இறந்தார்.
புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார்.