sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மத்திய அரசு விவசாய பட்ஜெட் போட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

/

மத்திய அரசு விவசாய பட்ஜெட் போட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மத்திய அரசு விவசாய பட்ஜெட் போட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மத்திய அரசு விவசாய பட்ஜெட் போட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்


ADDED : நவ 15, 2024 04:32 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: தமிழகத்தை பின்பற்றி, மத்திய அரசும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என, சிதம்பரத்தில் நடந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சிதம்பரத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கூடலையாத்தூர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிதம்பர நகர தலைவர் பெரியசாமி வரவேற்றார்.

சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பல்வேறு பகுதிகளில் இருந்து, சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கான வாழ்வாதாரமாக கருதப்படுகிறது. அதுபோல மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டும். திட்டக்குடி, அடுத்துள்ள கீழ்கல்பூண்டி கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே 32 லட்சத்தில் தடுப்பணை கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது, அப்பணியை உடனடியாக பணி துவங்க வேண்டும், விருத்தாசலம் கோட்டத்தில் தூர்வாரப்படாத ஏரி. குளங்கள் தூர் வார வேண்டும்.

கடலூர் மாவட்டம் மா. புளியங்குடி மயிலாடுதுறை மாவட்டம் சித்தமில்லி இடையே குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். வீராணம் ஏரியின் பாசன கிளை வாய்க்கால்களை துார்வார வேண்டும்,

பிரதமரின் கிசான் திட்டம் போல, தமிழக முதல்வர் நிதியுதவி கிசான் திட்டம் விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் நகர தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us