/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றில் தடுப்பணை விவசாயிகள் கோரிக்கை
/
வெள்ளாற்றில் தடுப்பணை விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 29, 2025 07:21 AM
பெண்ணாடம் : நந்தப்பாடி - மோசட்டை இடையே வெ ள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெண்ணாடம் மற்றும் முருகன்குடி, துறையூர், நந்தப்பாடி, சத்தியவாடி, மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, கிளிமங்கலம், டி.வி.புத்துார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளாற்றங்கரையோரம் உள்ளது.
இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் போர்வெல் பாசனம் மூலம் நெல், கரும்பு, கேழ்வரகு மற்றும் வாழை, கத்தரி, கொத்தவரை, முருங்கை உள்ளிட்ட தோட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக போதிய மழையின்றி ஆற்றில் நீர்வரத்து குறைந்து போர்வெல் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
இதனால் பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
எனவே, நந்தப்பாடி-மோசட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.