sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

/

உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை


ADDED : அக் 20, 2025 09:44 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென, கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி நகரம் மற்றும் மங்களூர், நல்லுார் வட்டாரங்களில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளன. மேலும், தோட்டப் பயிர்களான கீரை, பயறு வகைகள் மற்றும் கத்தரி, வெண்டை, அவரைக்காய், கொத்தவரை, சுரைக்காய், பூசணி, வாழை, வேர்க்கடலை, மக்காச்சோளம், மரவள்ளி போன்றவைகளை விவசாயிகள் ஆண்டுதோறும் சாகுபடி செய்வது வழக்கம்.

அவ்வாறு விளைந்துள்ள விளை பொருட்களை விற்பதற்கு சைக்கிள் மற்றும் மொபட்களில் பல்வேறு கிராமம், நகர பகுதிகளுக்கு செல்கின்றனர். ஆனால் போதிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.

இதனை தவிர்க்க திட்டக்குடி நகராட்சியில் உழவர் சந்தை அமைத்தால் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை விற்பனை செய்து, லாபம் ஈட்ட வாய்ப்பாக அமையும்.

எனவே, திட்டக்குடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us