sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதையில் உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

/

விருதையில் உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதையில் உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதையில் உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 12, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது பின்வருமாறு:

சக்திவேல்: கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாடுகளின் இறைச்சியை பொது வெளியில் வெட்டி விற்பனை செய்கின்றனர். அத்துடன் மான் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

70 லட்சம் ரூபாயில் கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்து, சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, கருவேல மரங்களை பகுதி பகுதியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ்: வாரிசு சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் குளறுபடிகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

அதிகாரிகள் மிஸ்சிங் : விவசாயிகள் அதிருப்தி

ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா கூட்டத்தில், பங்கேற்காததால் பெரும்பாலான அரசு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்கவில்லை. வழக்கமாக கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நெரிசலை தவிர்க்கும் வகையில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் கூட அதிகாரிகள் பங்கேற்காத அலட்சியத்தால் கோரிக்கைகள் அரசுக்கு செவிவழி எட்டாத நிலையாகவே உள்ளது என விவசாயிகளின் புலம்பிச் சென்றனர்.








      Dinamalar
      Follow us