sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விதிமீறல் இறால் பண்ணைகள் விவசாயிகள் மனு

/

 விதிமீறல் இறால் பண்ணைகள் விவசாயிகள் மனு

 விதிமீறல் இறால் பண்ணைகள் விவசாயிகள் மனு

 விதிமீறல் இறால் பண்ணைகள் விவசாயிகள் மனு


ADDED : நவ 19, 2025 08:06 AM

Google News

ADDED : நவ 19, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பரங்கிப்பேட்டை அருகே விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை எழுந்துள்ளது.

பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தில் கொடுத்த மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சில்லாங்குப்பம் மண்டபம், அரிராஜபுரம், குத்தாபாளையம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

அதில் அரியகோஷ்டி, பெரியகுமட்டி கிராமங்களில் உள்ள, 150 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், உளுந்து உள்ளிட்ட விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

அப்பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் அரசு விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகள், கழிவு நீரை விவசாய நிலத்தில் திறந்து விடுகின்றனர்.

இதனால் விவசாயப்பயிர்கள் கருகி, முளைப்புத்தன்மை இல்லாமலும் வீணாகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் விவசாயிகள் கடும் மனவேதனைக்கு உள்ளாகின்றனர். கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us