ADDED : மார் 14, 2024 05:31 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம : விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கோரி, மேல்பட்டாம்பாக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கேரளா அரசு போல் பயிர்களை சேதபடுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலாளர் ராமானுஜம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், ஜெயபாண்டியன், அருண், சுந்தரபாண்டியன், ஸ்டீபன்ராஜ், ரஞ்சித்குமார், எத்திராஜ், திருமலை, ரவிக்குமார், சின்னப்பராசு, திருவேங்கடம், விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
