ADDED : மே 07, 2025 01:10 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம் : கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பாரதிகுமார் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், பஞ்சமூர்த்தி மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
