sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகளை கழுத்து அறுத்து கொலை செய்த தந்தை கைது

/

மகளை கழுத்து அறுத்து கொலை செய்த தந்தை கைது

மகளை கழுத்து அறுத்து கொலை செய்த தந்தை கைது

மகளை கழுத்து அறுத்து கொலை செய்த தந்தை கைது


ADDED : ஜூன் 28, 2025 07:10 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை குத்தி கொலை தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் அபிதா,27; பட்டப் படித்து முடித்து விட்டு காட்டுமன்னார்கோவில் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.

அர்ஜூனன் கடந்த சில மாதங்களாக பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தார். மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறி அபிதா, திருமணத்தை தள்ளி போட்டே வந்தார். இதனால் தந்தைக்கும், மகளுக்கும் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று அர்ஜூனன் மனைவி ரேஷன் கடைக்கு சென்று விட்டார். அர்ஜூனன், அபிதா வீட்டில் இருந்தனர். அப்போது, மகளின் காதல் விவகாரம் தெரியவரவே மீண்டும் தந்தை, மகள் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ஜூன், அபிதாவை கட்டையால் தாக்கியும், பேனா கத்தியால் கழுத்தை அழுத்தும் கொலை செய்தார்.

தகவலறிந்த புத்துார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடன், போலீசார் வழக்குப் பதிந்து அர்ஜூனனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை தந்தை கொலை செய்த சம்பவம் காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us