ADDED : ஜன 09, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
குள்ளஞ்சாவடி அடுத்த பேய்க்காநத்தம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், 42. இவரது மகள், தமிழ்ச்செல்வி, 19. வடலுாரில் உள்ள தனியார் கலை கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கிய நிலையில் திடீரென மாயமானார்.
மகளை பல இடங்களிலும் தேடியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ஜெயராமன் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.