ADDED : ஜன 30, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
புவனகிரி அருகே பெருமாத்துார் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் மாயவன்.
இவரது மகள் சுபிதா,23; சென்னை தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 27ம் தேதி, வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிசென்றவரை காணவில்லை.
இதுகுறித்து மாயவன் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.