ADDED : பிப் 05, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 60; இவரது, மகள் சுமதி, 18; புவனகிரியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி கல்லுாரிக்கு சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து, துரைசாமி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சுமதியை தேடிவருகின்றனர்.