/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு
/
மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு
ADDED : பிப் 06, 2025 11:17 PM
கடலுார்: காட்டுமன்னார்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலகடம்பூரை சேர்ந்தவர் ராகவன், 75; கூலி தொழிலாளி. இவரது மகன் தாமோதரன், 47; திருமணமாகாத இவர், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 29ம் தேதி, ராகவன் தனது வீட்டு வாசல் முன் நின்றிருந்தார்.
அங்கிருந்த தாமோதரன், திடீரென செங்கல் எடுத்து, ராகவனை தாக்கினார்.
இதில், படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். வி.ஏ.ஓ., பழனியப்பன், 59; அளித்த புகாரின் பேரில், தாமோதரன் மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.