ADDED : அக் 12, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; தந்தை மாயமானது குறித்து மகன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் சித்தலுாரை சேர்ந்தவர் மருதை மகன் திருஞானம், 55; கூலி தொழிலாளி. கடந்த 6ம் தேதி கேரளாவுக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், மறுநாள் வீட்டிற்கு திரும்பி வருவதாக மனைவியிடம் மொபைல் போனில் தெரிவித்துள் ளார்.
ஆனால், வீட்டிற்கு வராததால் கேரளாவில் விசாரித்தபோது, அங்கும் செல்லாதது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் தமிழ்ச்செல்வன் கொடுத்துள்ள புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.