நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தீராத வயிற்று வலியால் பூச்சிமருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் பாலசுப்ரமணியன் மனைவி தமிழரசி, 53; தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த, 29ம் தேதி மீண்டும் வலி ஏற்பட்டதால் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது கணவர் பாலசுப்ரமணியன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

