sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காட்டுப்பன்றி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

/

காட்டுப்பன்றி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்


ADDED : டிச 09, 2024 07:07 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட திருமலை அகரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகள் லதா, 48. கூலித் தொழிலாளி.

திருமணமாகாமல் தனியாக வசிக்கிறார். இவரது வீட்டின் அருகே வயல் பகுதி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் தனது பசுமாட்டிற்கு தண்ணீர் வைக்க வந்தபோது, பின்னால் இருந்து வந்த காட்டுப்பன்றி அவரை திடீரென தாக்கியது. இதில், மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

லதா கூச்சலிட அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு பெண்ணாடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பெண் கூலித்தொழிலாளியை காட்டுப்பன்றி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us