
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு நுண்கலை மன்ற விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இணை பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். மதுரை அண்ணா ஆப்தோமெட்ரி கல்லுாரி முதல்வர் இந்திரா விஜயலட்சுமி கலந்துகொண்டு, 'வானம் வசப்படும்' தலைப்பில் பேசினார்.
இதில், அனைத்து துறை உதவி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இணை பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

