/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தில் பாதிப்பு: எம்.எல்.ஏ., நிவாரணம்
/
தீ விபத்தில் பாதிப்பு: எம்.எல்.ஏ., நிவாரணம்
ADDED : டிச 30, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: டிச. 30-: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் ஆதிமூலம் என்பவரின் குடிசை வீடு தீயில் எரிந்து சேதமானது. இவரது குடும்பத்தினருக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி அரிசி, வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி, முத்து, சந்திரகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிமாறன், கிளை செயலாளர் அறிவுச்செழியன் உடனிருந்தனர்.

