நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு வடலுார் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் சிவக்கொழுந்து மற்றும் வீரர்கள் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளித்தனர்.

